ஞாயிறு, 4 பிப்ரவரி, 2018

உலக கேன்சர் தினம்-பிப்ரவரி 4.



உலக கேன்சர் தினம்-பிப்ரவரி 4.

உயிர்க்கொல்லி நோய்களில் முதன்மையானது கேன்சர் . இதனால் ஏற்படும் பாதிப்புகள், அதன் சிகிச்சை முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பிப்., 4ம் தேதி உலக கேன்சர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நுரையீரல், மார்பகம், தோல், வயிறு, நாக்கு, தொண்டை கேன்சர் என பல வகைகள் உள்ளன. கேன்சர், உடலின் ஒரு செல்லில் இருந்து மற்றொரு செல்லுக்கு பரவுகிறது. இதை கட்டுப்படுத்த முடியாதாதல், உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. .

சிகிச்சை முறை:

கேன்சரின் வகை, அதன் நிலை, வயது, உடல்நிலை போன்றவற்றை பொறுத்து சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. ரேடியேஷன், கீமியோதெரபி, இம்மினோ தெரபி, ஹார்மோன் தெரபி, ஜென் தெரபி உள்ளிட்ட சிகிச்கைள் மேற்கொள்ளப்படுகின்றன.கேன்சரால் ஆண்டுதோறும் 76 லட்சம் பேர் இறக்கின்றனர். இது உலகில், ஆண்டுதோறும் ஏற்படும் உயிரிழப்பில் 13 சதவீதம். கேன்சரால் இறப்பவர்களில் 70 சதவீதம் பேர், ஏழை மற்றும் நடுத்தர வருமானம் உடைய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. துவக்கத்திலேயே முறையான சிகிச்சை மேறகொண்டால், 40 சதவீதத்தை தடுக்க முடியும். இதில் மார்பக கேன்சர், குடல் மற்றும் தொண்டை கேன்சர் ஆகியவையும் அடங்கும். அனைத்து நாடுகளும் கேன்சரை கட்டுப்படுத்துவற்கு 4 முறைகளை கடைபிடிக்க வேண்டும். முன்னரே தடுப்பது, ஆரம்பக்கட்டத்திலயே தடுப்பது, பரிசோதனை மற்றும் சிகிச்சை, நோய் தணிப்பு ஆகியவை மூலம் கேன்சரை வராமல் தடுக்கவும் முடியும்.

ஏன் புற்றுநோய்:


கேன்சருக்கு முதல் எதிரியே புகையிலை தான். வாய் மற்றும் தொண்டை கேன்சர் ஏற்பட இதுவே காரணம். இந்தியாவில், புகையிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. என்னதான், சிகரெட் அட்டையில் எச்சரிக்கை படம் ஒட்டப்பட்டிருந்தாலும், அது யாரையும் திருத்துவதாக தெரியவில்லை. பல இளைஞர்கள் புகைப்பதை, ஒரு "ஸ்டைலாக' நினைத்து பாதிப்புக்குள்ளாகின்றனர்.

எப்படி தடுப்பது:


ஆல்கஹால், புகையிலை பயன்படுத்துவதை அறவே ஒழிக்க வேண்டும். சத்தான காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி அவசியம். சீரான உடல் எடையை கடைபிடிக்க வேண்டும். தூசியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் விறகு உள்ளிட்ட திடப்பொருள்களை பயன்படுத்தி சமைப்பதால் ஏற்படும் புகையிலிருந்து பாதுகாப்பது அவசியம்.

பருவ வயது புற்றுநோய்:


சிகிச்சையால் தடுக்கலாம்: ""பருவ வயது புற்றுநோய் வருவதற்கு முன்பே, சில ரத்தப் பரிசோதனை மூலம் கண்டுபிடித்து வராமலே தடுக்கலாம்,'' என, மதுரை கே.கே.நகர், மோகன்ஸ் மெடிசிட்டி டாக்டர்கள் மோகன் பிரசாத், மகாலட்சுமி பிரசாத் கூறினர்.அவர்கள் மேலும் கூறியதாவது: டீன் ஏஜ் வயதில் (13 முதல் 19 வயது வரை) குழந்தைகள் சுறுசுறுப்புடனும், துடிப்புடனும் செயல்படுவர். இந்த வயதில் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால், அவர்களை நோய்கள் தாக்காது. ஆனால் இந்த வயது தான், ஒரு சில புற்றுநோய்களால் பாதிக்கப்படும் வயது, என்பது பெரும்பாலானவருக்கு தெரியாது. இந்த வயதில், அதை போன்ற ஆபத்து இருப்பதால், இதை மார்க்கண்டேய வயது என்கிறார்கள்.இந்த பருவ வயதில் புற்றுநோயால் குணமடைந்து, திருமணம், மகப்பேறு, குடும்ப வாழ்க்கையை குறையின்றி அனுபவிக்கலாம். இதற்கெல்லாம் காரணம், இன்றைய புற்றுநோய் சிகிச்சையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் தான். நுண் ஊசி மூலம் புற்றுநோய் கண்டுபிடிப்பு, முறையான அறுவை சிகிச்சை மற்றும் நவீன புற்றுநோய் மருத்துவ சிகிச்சை ஆகியவை தான், இந்த வெற்றிக்கு காரணம், என்றனர்.

புற்றுநோய் எப்படி ஏற்படுகிறது :



செல்கள் கட்டுப்பாடற்று பிரிந்து பெருகுவதால் ஏற்படுவது புற்றுநோய். நமது உடல் முழுவதும் செல்களால் ஆனது. இவை வளர்ந்து, பிரிந்து உடலை ஆரோக்கியமாக மாற்றத் தேவையான பல செல்களை உருவாக்குகிறது. சில வேளைகளில் தேவையற்ற பல புதிய செல்கள் உருவாதல் மற்றும் பழைய செல்கள் இறக்காமல் உயிரோடு இருத்தல் போன்ற மாற்றம் உடலில் ஏற்படுகிறது. இச்செல்கள் அனைத்தும் கூட்டாக இணைந்து உடலில் கழலைகள் போன்ற ஒன்றை உருவாக்குகிறது. இது தீங்கற்ற கழலைகள், தீங்கு விளைவிக்கும் கழலைகள் என இருவகைப்படும். தீங்கற்ற கழலைகள், புற்றுநோய் அல்ல. இதனை உடலில் இருந்து எளிதில் நீக்கி விட லாம். இக்கழலைகள் மீண்டும் தோன்றாது மற்றும் உடலிலும் பரவாது. தீங்குள்ள கழலைகள் புற்றுநோய். இக்கழலைகள் உடலில் கட்டுப்பாடற்று பெருகிவரும். மேலும் இதில் உருவாகும் செல்கள் மற்ற திசுக்களில் உள்ள செல்களை அழித்து விடும். மேலும் இச்செல்கள் ரத்த ஓட்டம் மற்றும் நிணநீர் மண்டலத்துக்குள் நுழைந்து விடும். ரத்த நாளங்கள் மூலம் உடலில் ரத்த ஓட்டம் நடைபெறுகிறது. நிணநீர் மண்டலம், ரத்த வெள்ளை அணுக்களை உடலில் பல பகுதிகளுக்கு எடுத்துச்செல்லும் வேலையை செய்கிறது. இதில் தீங்குள்ள கழலைகளில் உருவான செல்கள் கலப்பதால் வெள்ளையணுக்கள் செல்லும் இடங்களில் புற்றுநோய் உருவாகிறது.

காரணம்:*தேவையற்ற செல்களின் வளர்ச்சி மற்றும் செல்களின் இறப்பினை கட்டுப்படுத்தும் மரபிகளில் ஏற்படும் மாற்றம்.
*புகைப்பழக்கம் மற்றும் முறையற்ற உணவுப்பழக்கம்.
*சூரியனிடம்மிருந்து வெளிவரும் புறஊதாக்கதிர்கள்.
*புற்றுநோய் ஏற்படும் வாய்புள்ள பணியில் ஈடுபடுதல்.
* எச்.ஐ.வி.,தொற்று உள்ளோரிடமிருந்து பரவுதல்.
*பெற்றோர்களிடம் இருந்து உருவாதல்.

அறிகுறிகள்:*உடலில் உள்ள உறுப்புகளில் ஒருவித தடிப்பு மற்றும் வீக்கம்.
*உடலில் உள்ள மச்சத்தில் ஏற்படும்

மாற்றங்கள்:*ஆறாத புண்கள்.
*தொடர் இருமல் மற்றும் கரகரப்பான கம்மிய குரல்.
*மலம் மற்றும் சிறுநீர் கழிக்கும் நேரத்தில் மாற்றம்.
*தொடர்ந்த அஜிரணம் மற்றும் உணவை விழுங்குவதில் பிரச்சனை ஏற்படுதல்.
*உடல் எடையில் மாற்றம்.
*இயல்புக்கு மாறான ரத்தபோக்கு மற்றும் ரத்த கசிவு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக