வெள்ளி, 8 செப்டம்பர், 2017

இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..



இட்லி,தோசைக்கு சூப்பரான தக்காளி ஊறுகாய்..

இட்லி, சப்பாத்தி, தோசை, தயிர் சாதத்திற்கு தொட்டுக்கொள்ள இந்த தக்காளி ஊறுகாய் சூப்பராக இருக்கும். இந்த தக்காளி ஊறுகாய் பத்து நாட்கள் வரை கெட்டுப்போகாது.
தேவையான பொருட்கள் :

தக்காளி - 1 கிலோ
காய்ந்த மிளகாய் - 2
தனி மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 1 குழிக்கரண்டி
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - அரை ஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து.


செய்முறை :

வெந்தயத்தை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்து கொள்ளவும்.

தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய தக்காளியுடன், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், உப்பு பெருங்காயம் போட்டு நன்றாக வதக்குங்கள்.

தக்காளியில் உள்ள தண்ணீர் எல்லாம் நன்றாக வற்றியதும் தக்காளி நன்றாக சுருண்டு திக்காகி எண்ணெய் மிதந்து வரும் சமயத்தில் பொடித்து வைத்துள்ள வெந்தயத்தூளை சேர்த்து நன்றாக கிளறி அடுப்பிலிருந்து இறக்குங்கள்.

சூப்பரான தக்காளி(தொக்கு) ஊறுகாய் ரெடி.

இந்தக் தக்காளி(தொக்கு) ஊறுகாய் பத்து நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக