திங்கள், 4 செப்டம்பர், 2017

ஆசிரியர் தின வாழ்த்து கவிதை...


ஆசிரியர் தின வாழ்த்து கவிதை...

ஆசிரியவேர்கள்                        
பூக்கும் மலர்களைப்
பார்ப்பவர்கள்
வேரின் பாடுகளை
பார்ப்பதில்லை!
வேர்கள் கண்ணுக்கு
தெரிவதில்லை
வேர்களின்உழைப்பும்
புரிவதில்லை!
அறிவின் சாறேற்றம்
நடத்துகின்ற
ஆசிரியர்களும்இங்கு
வேராய்தானே இருக்கின்றார்!
மாணவர்அறிவை
மலா்த்துகின்றார்!
மாணவர்களுள் எத்தனை ரகம்?
ஈரநிலமாய் சிலர்மனம்!
வறண்டநிலமாய்
சிலர்மனம்!
எந்த ரகத்திலும்
ஆசிரியவேர்கள்
ஊடுருவிச் சென்று
மாணவர் புலமையைப் பூக்கச்
செய்திடும் இவர்களன்றோ
கண்கண்ட தெய்வங்கள்!

ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக