செவ்வாய், 30 மே, 2017

புதிதாக கல்யாணமான தன் மகனுக்கு அம்மா சொன்ன புத்திமதிகள்



புதிதாக கல்யாணமான தன் மகனுக்கு  அம்மா சொன்ன புத்திமதிகள்

                 
1. எந்தச் சமயத்திலும் மனைவியை அம்மா கூட ஒப்பிடவே கூடாது....!

மகனே...மறந்து கூட என்னை உன் மனைவியோட ஒப்பிட்டுப் பார்க்காதே...

உன் அம்மாவுக்கு குடும்ப வாழ்க்கையில் 30 ஆண்டு கால அனுபவம் இருக்கு.
ஆனா உன் மனைவி உன்னை மாதிரி தான். இந்த வாழ்க்கைக்கு புதுசு.

உன்னை நான் வளர்த்த மாதிரி தான். அவங்க அம்மாவும் அவளை பார்த்துப் பார்த்து வளர்த்து  அனுப்பியிருக்காங்க.

அவளுக்குக் சிலபல ஆண்டுகள் தேவைப்படும்.
அதற்குப் பிறகு , உன் குழந்தைக்கு அருமையான அம்மாவாக அவள் இருப்பாள்.

2. மனைவி உனக்கு அம்மா இல்லை, தோழி..!

மகனே, உன் மனைவி உன்னுடன் வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்ள வந்துள்ள தோழி.  அம்மா இல்லை.

உன் அம்மாவுக்கு உன்னைக் கவனிப்பது மட்டும் தான் வேலை.
ஆனால் , உனக்கு உன் மனைவிய நீ நன்றாக கவனிப்பது முக்கியம்.

நீங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவது மிக மிக முக்கியம்.

3.மதிக்கப்படவேண்டியவள் மனைவி...!

மகனே , உன் வாழ்க்கையின் ஏற்றத்தாழ்வுகள், நல்லது கெட்டது அனைத்திலும் உன் மனைவி உடனிருந்து பங்கு கொள்ளப்போகிறவள்.

அவளை மதிக்கவேண்டும்.
உன் ஒவ்வொரு முன்னேற்றப்படியிலும் அவள் பங்கு உள்ளது.

அவள் கருத்துகளைக் கேட்டு, முன்னுரிமை கொடுத்து வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இரு..!

4. புகுந்த வீடு வந்த மனைவியை இயல்பாக உணர வைக்க உதவி செய்யணும்.

பிறந்து , வளர்ந்து மகிழ்ந்திருந்த பிறந்த வீட்டை விட்டு,
நம் பொருட்டு புகுந்த வீட்டுக்கு வந்திருக்கிறாள் உன் மனைவி...

 அவளை இயல்பாக  இருக்க வைக்க நீதான் உதவணும்..
சின்னச் சின்ன விஷயங்கள் கூட அவளுக்கு சங்கடத்தைத் தரலாம்..

அதை நீதான் கவனிச்சு அவள் பிறந்த வீட்டில் இருப்பதைப் போல உணர வைக்கணும்...!

5. எப்பொழுதும் மனைவியைக் காதலி...!

காதலிக்க வயசு ஒரு பொருட்டே இல்லை.. எப்பொழுதும்  உன் மனைவியை சந்தோஷமா வச்சுக்கோ..

சின்னச்சின்ன சர்ப்ரைஸிங்கான பரிசுகள், வெளிய அழைச்சுட்டுப் போறது, அவள் டிரஸ்ஸிங்கை சிலாகித்துப் பேசறது, சந்தோஷமா வாய்விட்டு சிரிக்கறது மாதிரியான விஷயங்கள் உங்க ரெண்டுபேரையும்...எப்பவும இளமையா உணர வைக்கும்...!

ஐந்து பாய்ண்ட்டுகளையும் சேர்த்து ஒரே பாய்ண்ட்டா சொல்லட்டா.....!

உங்க அப்பா(நல்ல அப்பா மட்டும்) என்னை எப்படி நடத்தறாரோ....?
அது போல நீயும் உன் மனைவியை...கௌரவமா மதிச்சுக் குடும்பம் நடத்து மகனே..!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக