வெள்ளி, 27 டிசம்பர், 2019

அலமாரிகளை அழகாக வைக்க வேண்டுமா?


அலமாரிகளை அழகாக வைத்துக்கொள்வது எப்படி?

⭐ பெரும்பாலான வீடுகளில் துணிகள் வைக்கும் அலமாரிகளை ஒரு குடோன் போல் வைத்திருப்பார்கள். அலமாரியின் கதவை திறந்த உடனேயே நம் தலையில் துணிகள் மற்றும் வைத்திருக்கும் பொருட்களானது விழுவதுபோல் இருக்கும்.

⭐ அலமாரிகளை சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக்கொள்வது எப்படி? என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

⭐ துணி வைக்கும் அலமாரியில் நம்முடைய துணிகளை வகைப்படுத்தி அடுக்க வேண்டும். தினசரி உபயோகிக்கும் துணிகள் ஒரு ரேக்கிலும், அயர்ன் செய்த துணிகளை தனியாகவும் வைத்து விட்டால் துணிகளை எங்கே வைத்தோம் என்று தேட வேண்டிய அவசியமே இருக்காது.

⭐ உள்ளாடைகள், கைக்குட்டைகள், சாக்ஸ்கள் போன்றவற்றிற்கு தனியாக ஒரு ரேக்கை பயன்படுத்த வேண்டும்.

⭐ மாதம் ஒரு முறையாவது அலமாரியை சுத்தம் செய்து பின்னர் அடுக்குவது சிறந்தது.

⭐ மேல் அலமாரியில் துணியையோ, பொருட்களையோ தனித்தனியாக அடுக்கினால் அவற்றை எடுப்பது சிரமமாக இருக்கும். எனவே பெட்டியில் போட்டு அவற்றை மேல் அலமாரியில் வைத்து விட்டால் அவற்றை எடுப்பது எளிதாக இருக்கும்.

⭐ ஹேங்கரில் துணிகளை தொங்கவிடும்போது நீளமான துணிகளை இடது புறமும், குட்டையான துணிகளை வலது புறமும் தொங்கவிட்டால் எளிதாக எடுக்க முடியும்.

⭐ ஸ்வெட்டர்கள், ஜீன்ஸ்கள் போன்றவற்றை மடித்து வைத்து உபயோகிக்கும் பொழுது அவை சுருக்கம் ஏற்படாமலும், வடிவம் மாறாமலும் இருக்கும்.

⭐ அடிக்கடி உபயோகிக்கும் துணிகளை நம் கண்களுக்குத் தெரியும் உயரத்தில் மற்றும் எடுக்க வசதியாக உள்ள அலமாரி ரேக்குகளில் வைக்க வேண்டும்.

⭐ ரேக்குகளில் தடுப்புகளை ஏற்படுத்தி அதில் உள்ளாடைகள், சாக்ஸ், டை மற்றும் கைக்குட்டைகளை தனித்தனியாக அடுக்கிக் கொள்வதால் துணிகளைத் தேடி எடுக்க வேண்டிய பதற்றம் இருக்காது.

⭐ அலமாரியில் உள்ள தேவையற்ற பொருட்கள் மற்றும் துணிகளை அடிக்கடி அப்புறப்படுத்தி அலமாரியை சுத்தமாக வைக்க வேண்டும்.

⭐ மிகவும் அவசரமாகவும், பதற்றமாகவும் உள்ள நேரங்களில் அலமாரியை திறந்து அதில் நாம் தேடும் பொருள் கிடைக்கவில்லை என்றால் இன்னும் எரிச்சலும், கோபமும் வரும்.

⭐ எனவே, இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்க்க மட்டுமல்லாமல், சுத்தமாக வைத்துக்கொள்வது நம்முடைய கடமை என்பதை கருத்தில் கொண்டு அனைத்து பொருட்களையும் சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக்கொள்வோம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக