வெள்ளி, 12 ஜனவரி, 2018

யார்? பேரழகி..


யார்? பேரழகி..

ஒரு குழந்தை தெருவில் தனியாக
அழுதுகொண்டு நின்றது,
அதைப் பார்த்தவர்கள்
குழந்தையிடம் வந்து ''ஏன் அழுகிறாய் ''என்று கேட்டனர்,என் அம்மாவை காணவில்லை என்றது,அவர்கள் அனைவரும் உன் அம்மா எப்படி இருப்பாள் என்றார்கள். 'அதற்கு அந்த குழந்தை 'என் அம்மா அழகாக இருப்பார்கள் ''என்றது.இதை அனைவரும் அந்த நாட்டின் மன்னனிடம் கூறினார்கள்.

அப்போது மன்னர் அந்த ஊரில் உள்ள அனைத்து அழகான பெண்களையும் வர சொல்லி அந்த குழந்தையிடம் காட்டினார். அவர்கள் அனைவரையும் பார்த்து விட்டு இவர்கள் எல்லாரையும் விட என் அம்மா அழகாக இருப்பாள் என்றது.

அந்த ஊரிலே மிகவும் அழகானவள் ராணி தான். அதனால் ராணியையும் அழைத்து வந்தார்கள். ராணி அழகாக அலங்காரம் செய்திருந்தாள்.அனைத்து மக்களும் ராணியையே கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தார்கள்.

அந்த குழந்தை என் அம்மா இவர்களை விடவும் அழகாக இருப்பார்கள் என்றது. அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். அந்த குழந்தையின் அம்மாவை பார்க்க அனைவரும் ஆவலோடு காத்திருந்தனர்.

அப்போது அங்கே ஒரு பெண் மிகவும் கருத்த நிறத்துடன் சுருங்கிய தோல்களுடனும் பார்ப்பதற்க்கே அவலட்சனத்துடன் வந்தாள்

.அப்போது அந்த குழந்தை ''அம்மா ''என்று கூறி ஓடி போய் அவளை கட்டி கொண்டு இவள் தான் என் அம்மா என்றது.

அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.
 அனைத்து குழந்தைகளுக்கும் தன் அம்மா எப்படி இருந்தாலும்

அவர்களுக்கு அவள் பேரழகு தான் .............!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக