வெள்ளி, 9 ஜூன், 2017

காலா பாடல் வரிகள்


காலா கரிகாலவின்  பாடல் வரி...

காலா கரிகாலா..
காலா கரிகாலா..

தங்க தமிழன்டா..
தாடி வச்ச தலைவன்டா..

திருநெல்வேலி சீமையடா..
சிவந்த மண் பூமியடா..

காலாவின் பேரை சொன்னால் மான் கூட புலியை வெல்லுமடா..

கடலலையும் கை கட்டுமடா..
காட்டு தீயும் நீர் சொட்டுமடா..

பறை அடித்து பாடுங்கடா..
நரைமுடி நாயகன..
நினைத்ததை முடிப்பவன்..
எதிரியை அடிப்பவன் இவனடா...

ஆதி சமுகத்தின் மொவனடா..
சீரி வரும் சிறுத்தையே..
நாங்கள் பற்றினோம் உன் கரத்தையே..

உன் மீசை முறுக்கம் எதிரிக்கு ஈரகுலை அறுக்கும்..
உன்னால் தான் நம் குலம் செழிக்கும்...
காவி வேட்டி அணிந்த கடவுள்டா..

கருப்பு சட்டை போட்டா எங்க காலாடா கரிகாலாடா..
அரை நொடியில் அகிலம் அலறும் எதிரி உன்னை சீண்டினால்..

எவனாக இருந்தாலும்..
எமனாக இருந்தாலும் மரணம் நிச்சயம் உன்னை தீண்டினால்..

அடைந்து கிடந்தோம் அடிமை என்னும் கூண்டினால்..
அடங்கமாட்டோம் ஆண்டிடுவோம் காலாவின் தயவினால்..

காற்றாய் புறப்பட்டாய்..
சொல்லும் செயலும் சூறாவளி...
காரணம் மறக்க முடியா தீரா வலி..
கோடி மக்கள் குறல் கொடுப்போம்..
கோடி மக்கள் போர் தொடுப்போம்..
கோடி மக்கள் உயிர் கொடுப்போம்..

காலா என்ற
கடவுளுக்கு..
கடவுளுக்கு பூஜை செய்பவன் அல்ல..
கடைமட்ட மக்களுக்காக புரட்சி செய்பவன் காலா..

உன்னால் ஒரு நாள் வரம்பு மீறும் அன்று வரலாறு மாறும்..
காலா பேரை சொன்னால் நாடி நரம்புகள் துடிக்கும்..

கண்ணில் தீ தெறிக்கும்...
உன் புன்னகை போர் வால் எடுக்கும்..
உன் வார்த்தைகளில் வால் வீசும்..

ஆள பிறந்தவன்.. ஆசையை துறந்தவன்..
ஏழை பாழைகளின்  கண்ணீர் துடைக்க..
புது சரித்திரம் படைக்க ஆண்டவனின் அவதாரம் காலா....
நான்...


மகிழ்ச்சி நன்றி பாடல் எழுதியவருக்கு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக