புதன், 2 நவம்பர், 2016

நாயன்மாரின் பட்டியல்

நாயன்மாரின் பட்டியல்
-----------------------------------
நாயன்மார்களை அறிமுகம் செய்து
வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார்.

அவர் பாடிய நாயன்மார் - 60 பேர் மட்டுமே.
63 பேர் அல்ல.

சுவாமிமலைக்குப் படி 60.
ஆண்டுகள் 60.
மனிதனுக்கு விழா செய்வதும் 60 வது ஆண்டு.
ஒரு நாளைக்கு நாழிகை 60.
ஒரு நாழிகைக்கு வினாடி 60.
ஒரு வினாடிக்கு நொடி 60.
இப்படி 60 என்றுதான் கணக்கு வரும்.
63 என்று வராது.

சுந்தரமூர்த்தி நாயனார் -
சிவபெருமான் அடி எடுத்துக் கொடுக்கப்
பாடிய நாயன்மார் 60 பேர்தான்.

சுந்தரமூர்த்தி நாயனார் மறைவுக்குப் பின்
100 ஆண்டுகள் கழித்து
நம்பியாண்டார் நம்பி அடிகள்
சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக்
கொஞ்சம் விரிவாகப் பாடுகின்றார்.
அப்போது 60 நாயன்மாரைப் பாடி,
அந்த 60 நாயன்மாரைப் பாடிக் கொடுத்த சுந்தரர்,
அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்),
அம்மா (இசைஞானியார்)
ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார்
-----------------------------------
நாயன்மாரின் பட்டியல் :
-----------------------------------
எண் – பெயர்             (குலம்)
1 - அதிபத்தர் (பரதவர்)
2 - அப்பூதியடிகள் (அந்தணர்)
3 - அமர்நீதி நாயனார் (வணிகர்)
4 - அரிவட்டாயர் (வேளாளர்)
5 - ஆனாய நாயனார் (இடையர்)
6 - இசைஞானியார் (ஆதி சைவர்)
7 - இடங்கழி நாயனார் (செங்குந்தர் குல குறுநில மன்னர்)
8 - இயற்பகை நாயனார் (வணிகர்)
9 - இளையான்குடிமாறார் (வேளாளர்)
10- உருத்திர பசுபதி நாயனார் (அந்தணர்)
11-எறிபத்த நாயனார் (செங்குந்தர்)
12 ஏயர்கோன் கலிகாமர் (வேளாளர்)
13 ஏனாதி நாதர் (சான்றார்)
14 ஐயடிகள் காடவர்கோன் (குறுநில மன்னர்)
15 கணநாதர் (அந்தணர்)
16 கணம்புல்லர் (செங்குந்தர்)
17 கண்ணப்பர் (வேடர்)
18 கலிய நாயனார் (செக்கார்)
19 கழறிற்றறிவார் (அரசர்)
20 கழற்சிங்கர் (குறுநில மன்னர்)
21 காரி நாயனார் (செங்குந்தர்)
22 காரைக்கால் அம்மையார் (வணிகர்)
23 குங்கிலியகலையனார் (அந்தணர்)
24 குலச்சிறையார் (மரபறியார்)
25 கூற்றுவர் (செங்குந்தர்) (குல குறுநில மன்னர்)
26 கலிக்கம்ப நாயனார் (வணிகர்)
27 கோச்செங்கட் சோழன் (அரசன்)
28 கோட்புலி நாயனார் (வேளாளர்)
29 சடைய நாயனார் (ஆதி சைவர்)
30 சண்டேஸ்வர நாயனார் (அந்தணர்)
31 சக்தி நாயனார் (வேளாளர்)
32 சாக்கியர் (வேளாளர்)
33 சிறப்புலி நாயனார் (அந்தணர்)
34 சிறுதொண்டர் (சாலியர்)
35 சுந்தரமூர்த்தி நாயனார் (ஆதி சைவர்)
36 செருத்துணை நாயனார் (வேளாளர் )
37 சோமசிமாறர் (அந்தணர் )
38 தண்டியடிகள் (செங்குந்தர்)
39 திருக்குறிப்புத் தொண்டர் (ஏகாலியர்)
40 திருஞானசம்பந்தமூர்த்தி (அந்தணர்)
41 திருநாவுக்கரசர் (வேளாளர்)
42 திருநாளை போவார் (புலையர்)
43 திருநீலகண்டர் (குயவர்)
44 திருநீலகண்ட யாழ்ப்பாணர் (பாணர்)
45 திருநீலநக்க நாயனார் (அந்தணர்)
46 திருமூலர் (இடையர் )
47 நமிநந்தியடிகள் (அந்தணர்)
48 நரசிங்க முனையர் (செங்குந்தர்) (குல குறுநில மன்னர் )
49 நின்றசீர் நெடுமாறன் (அரசர் )
50 நேச நாயனார் (சாலியர் )
51 புகழ்சோழன் (அரசர் )
52 புகழ்த்துணை நாயனார் (ஆதி சைவர் )
53 பூசலார் (அந்தணர் )
54 பெருமிழலைக் குறும்பர் (செங்குந்தர்)
55 மங்கையர்க்கரசியார் (அரசர் )
56 மானக்கஞ்சாற நாயனார் (வேளாளர் )
57 முருக நாயனார் (அந்தணர் )
58 முனையடுவார் நாயனார் (வேளாளர் )
59 மூர்க்க நாயனார் (வேளாளர் )
60 மூர்த்தி நாயனார் (வணிகர் )
61 மெய்ப்பொருள் நாயனார் (செங்குந்தர்) (குல குறுநில மன்னர்)
62 வாயிலார் நாயனார் (வேளாளர்)
63 விறன்மிண்ட நாயனார் (வேளாளர்)

அறுபத்துமூன்று நாயன்மாரில் மூவர் பெண்கள்.
1 - காரைக்கால் அம்மையார் :
கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் காலத்தால் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் ஆகும்.
2 - மங்கையர்க்கரசியார் :
சோழ இளவரசியான இவர், நின்றசீர்நெடுமாறன் மதுரையை ஆண்ட கூன் பாண்டியன் என்ற பாண்டிய மன்னனை மணந்தார். அவரே நின்றசீர் நெடுமாற நாயனார். அவர்தம் மனைவி மங்கையர்க்கரசியார் நாயன்மாரில் மற்றொரு பெண் ஆவார். பாண்டிய நாடு முழுவதும் சமண சமயம் பரவியிருந்த போது,  சைவ சமயத்தினை பின்பற்றிய இருவர்களில் மங்கையர்கரசியாரும் ஒருவர். இதனால் சைவர்கள் மங்கையர்களுக்கு அரசி என்ற பொருளில் மங்கையர்கரசி என்று பிற்பாடு வழங்கினார்கள்.
3 - இசைஞானியார் :
திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயனாரின் மனைவி இசைஞானியார் மூன்றாவது பெண் நாயனார் ஆவார். இவர்களின் மகன் சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் நாயன்மாரில் ஒருவரும் ஆவார்.

இறைவனின் குழ்ந்தைகளில்
ஆண், பெண்,
இந்த குலம், அந்த குலம்
என்ற பாகுபாடுகள் கிடையாது!

திருச்சிற்றம்பலம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக