சனி, 19 நவம்பர், 2016

கும்பாபிஷேகத்தின் சிறப்புகள்

கோவில் கும்பாபிஷேகம் நிறைய பார்த்திருப்பீர்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் ஆனால் கும்பாபிஷேகம் என்பது என்ன அதில் என்ன என்ன பூஜை செய்கிறார்கள் பலருக்கும் தெரியாது ஆதலால் அதை பற்றிய ஒரு சிறு விளக்கம் இங்கே

கும்பாபிஷேகத்தின் வகைகள்.

1, ஆவர்த்தம் – ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்துப் பிரதிஷ்டை செய்யப்படும் மூர்த்திகளுக்குக் கும்பாபிஷேகம் செய்யப் படுவது.

2, அனாவர்த்தம் – பூஜை இல்லாமலும் ஆறு,கடல் இவற்றால் சிதிலமடைந்திருந்தாலும் அக்கோயிலைப் புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.

3, புனராவர்த்தம் – கருவறை,பிரகாரம்,கோபுரம் முதலியன பழுது பட்டிருந்தால் பாலாலயம் செய்து அவற்றை புதுப்பித்து அஷ்ட பந்தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்வது.

4, அந்தரிதம் – கோயிலுள் ஏதேனும் தகாதன நேர்ந்து விடின் அதன் பொருட்டு செய்யப்படும் சந்தி.

கும்பாபிஷேகத்தில் விக்ரகப் பிரதிஷ்டையில் மேற்க்கொள்ளப்படும் அவசியமான கிரியைகள் பற்றிய விளக்கம்.

1, அனுஞை – {அனுமதி வாங்குதல்} செயல்களைச் செய்யும் ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்து எடுத்து இச்செயலைச் செய்வதற்கு இறைவன் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.

2, சங்கல்பம் – இறைவனிட்த்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல்.

3, பாத்திர பூஜை – இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜா பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த பாத்திரங்குலுக்குறிய தேவதைகளை பூஜை செய்தல்.

4, கணபதி பூஜை – செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.

5, வருண பூஜை – அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.

6, பஞ்ச கவ்யம் – ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாக கிடைக்கும் பால்,தயிர்,நெய்,பசுநீர்,பசுசானம் முதலியவைகளை வைத்து செய்யப்படும் கிரியை.

வாஸ்து சாந்தி – தேவர்களை வழிபட்டுக் கும்பாபிஷேகம் எவ்வித இடையூறுமின்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்க்கும் இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.

7, பிரவேச பலி – எட்டு திக்கிலும் உள்ள திக் பாலகர்களுக்கு உரிய பிரீதி செய்து அவர்களை அந்தந்த இடத்தில் இருக்க செயிதல் {துர் தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு}

8, மிருத்சங்கிரஹணம் – {மண் எடுத்தல்} அஷ்ட திக் பாலகர்களிடம் அனுமதி பெற்று சுத்தமான இடத்தில்ருந்து மண் எடுத்து அப்பள்ளத்தில் அபிஷேகம் செய்தல்.{ ஆலயம் நிர்மாணம் செய்ய பூமி தாயான பூமா தேவியை கஷ்ட படுத்தினதன் காரணமாக பூமா தேவியை மகிழ்விக்க செய்யப்படும் கிரியை}

9, அங்குரார்ப்பணம் – {முளையிடுதல்} எடுத்த மண்ணை பாலிகைகளில் விதைகளையிட்டு முளை வளர செய்தல். இதில் 12 சூர்யர்கலான வைகர்த்தன்,விவஸ்வதன்,மார்த்தாண்டன்,பாஸ்கரன்,ரவி,லோகபிரகாசன்,லோகசாட்சி,திரிவிக்ரமன்,ஆதித்யன்,சூரியன்,அம்சுமாலி,திவாகரன் போன்ற இவர்களையும் சந்திரனையும் வழிபடுதல்.

10, ரக்ஷாபந்தனம் – {காப்புக்கட்டுதல்} கிரியைகளைச் செய்யும் ஆசாரியனுக்கும் செய்யும் கர்த்தாவுக்கும்எவ்வித இடையூறுகள் வராதபடிக் காத்தற் பொருட்டு. அவன் கையில் மந்திர பூர்வமாகக் காப்பு {கயிறு} கட்டுதல்.

11, கும்பலங்காரம் – கும்பங்களை {கலசம்} இறைவன் உடம்பாக பாவித்து அலங்காரம் செய்தல்.

12, கலா கர்ஷ்ணம் – {சக்தி அழைத்தல்} விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்க்கு மந்திர பூர்வமாக அழைத்தல்.

13, யாகசாலா பிரவேசம் – கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.

14, சூர்ய,சோம பூஜை – யாகசாலையில் சூர்ய சந்திரனை வழிபடுதல்.

15, மண்டப பூஜை – அமைக்க பட்டிருக்கும் யாகசாலையை பூஜை செய்தல்.

16, பிம்ப சுத்தி – விக்ரகங்களை மந்திர பூர்வமாக சுத்தம் செய்தல்.

17, நாடி சந்தானம் – யாகசாலை இட்த்திற்கும் மூல திருமேனிக்கும் தர்பைக் கயிறு, தங்க கம்பி, வெள்ளிக் கம்பி, அல்லது பட்டுக் கயிறு இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல். { இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை இந்த இனைப்பு மூலமாக விக்ரஹங்களுக்கு கொண்டு சேர்த்தல்}

18, விசேஷ சந்தி - 36 தத்துவ தேவதைகளுக்கும் அர்க்யம் தருவது, உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ருக்களுக்கு அர்க்யம் தருவது.

19, பூத சுத்தி – இந்த பூத {மனித} உடம்பை தெய்வ உடம்பாக மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தல்.

20, ஸ்பர்ஷாஹுதி – 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்ரகங்களுக்குகொண்டு சேர்த்தல்.

21, அஷ்ட பந்தனம் – எட்டு பொருள்களால் ஆன இம்மருந்தினால் மூர்த்தியையும், பீட்த்தையும் ஒன்று சேர்த்தல். இதை மருந்து சாத்துதல் என்பர்.

22, பூர்ணாஹுதி – யாகத்தை பூர்த்தி செய்தல்.

23, கும்பாபிஷேகம் – {குடமுழுக்கு} யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட குடத்து நீரை அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார்.

24, மஹாபிஷேகம் – கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்ரஹத்திற்கு முறைப்படி அபிஷேகம் அலங்காரம் செய்தல்.

25, மண்டலாபிஷேகம் –
பிறந்த குழந்தையாக விக்ரஹத்தில் வீற்றிருக்கும் இறைவனை 48.நாட்கள் விஷேச அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தியுடன் இருக்கச் செய்வது.

மற்றும் சில.

ஏக குண்டம் – ஒரு குண்டம அமைத்தல்.
பஞ்சாக்னி – ஐந்து குண்டம் அமைத்தல்.
நவாக்னி – ஒன்பது குண்டம் அமைத்தல்.
உத்தம பக்ஷம் – 33.குண்டம் அமைத்தல்.

கும்பாபிஷேகத்திற்கு செய்யப்படும் யாகங்களை எத்தன தடவை செய்ய வேண்டும் என்று விதிமுறை உள்ளது. அது 2.காலம், 4.காலம், 8.காலம், 12.காலம் வரை செய்யும் முறை வழக்கத்தில் உள்ளது.

கும்பத்தை நம் சரீரமாக சொல்லப்படும் காரணம்.

யோகஜம் என்ற சிவாகமம் சரீரமாக கும்பத்தை எவ்வாறு கற்பிக்க வேண்டும் என்பதற்கு விபரமாகச் சொல்லுவதாவது.
கும்பமாகிய குடம் மாமிசமாகும், குடத்திலுள்ள தண்ணீர் இரத்தமாகும், கும்பத்தினுல் போடப்படும் ரத்தின்ங்கள் சுக்ளமாகும், கும்பத்தின் உள்ளே தர்பையினால் செய்யப்பட்ட கூர்ச்சம் நாடியாகும், குட்த்தின் மேலே நெருக்கமகச் சுற்றப் பட்டுள்ள முப்புரி நூல்களே நரம்புகளாகும், கும்பத்தை சுற்றி போர்த்திக் கட்டியுள்ள வஸ்த்திரமே தோல் ஆகும், குட்த்தின் மேல் இருக்கும் தேங்காய் சிரசாகவும்,முகமாகவும் கூறப்படுகிறது, தேங்காயின் மேலே விரித்துள்ள தர்பையினால் செய்யப்பட்ட லம்ப கூர்ச்சம் சிகை {குடுமி} ஆகவும், தேங்காய்க்கு அடியில் போடப்படும் மாவிலைகள் ஸ்வாமியின் ஜடாபாரங்கள்,உச்சரிக்கப்படும் மந்திரங்களே பிராணனாகும் என்று அங்க கற்பனை சிவாகமத்தில் கூறப்படுகின்றது.

*********************************
ஆவாஹனம்
ஆவாஹனம் என்றால் கும்பத்தில் உள்ள
நீருக்குள் மூர்த்திகளை எழுந்தருள செய்தல்
என்பது பொருள். கும்பத்தை முதலில்
கோயிலில் உள்ள தெய்வத்திருவின் அருகில்
வைத்து தர்ப்பை, மாவிலை ஆகியவற்றைக்
கொண்டு மந்திரங்கள் ஓதி, பிம்பத்தில்
விளங்கும் மூர்த்தியை கும்பத்தில் எழுந்தருளச்
செய்வார்கள். பிறகு அந்த கும்பத்தை
யாகசாலைக்கு எழுந்தருளச்
செய்வார்கள். தர்ப்பையின் மூலம்
கும்பத்தில் உள்ள தெய்வீக சக்தியை
பிம்பத்திற்கு மீண்டும் செலுத்துவார்கள்.
கும்பம்
யாகசாலையில் மந்திரம், கிரியை, தியானம்
ஆகியவற்றுடன் வளர்க்கப்பட்டு எழும் புகையுடன்
வேத ஒலி, சிவாகம ஒலி, மறை ஒலி
ஆகியவற்றுடன் பக்தர்களின் நல்ல
எண்ணங்களும், எங்கும் நிறைந்திருக்கின்ற
திருவருள் சக்தியை தூண்டிவிட்டு கும்பத்தில்
விளங்கச் செய்யும். அப்போது கும்பம்
தெய்வீக சக்தி பெறும். இந்த
கும்பத்தை சிவனின் வடிவமாக ஆகமங்கள்
கூறுகின்றன.
பாலாலயம்
கும்பத்தை கோயிலில் உள்ள தெய்வச்சிலை
அருகில் வைப்பார்கள். தர்ப்பை, மாவிலை
கொண்டு மந்திரங்கள் ஓதி,
தெய்வ வடிவில் விளங்கும் மூர்த்தியை
கும்பத்திற்கு மாற்றுவார்கள். பின்பு அதை
வேறிடத்திற்கு எழுந்தருளச் செய்வார்கள்.
இதை பாலாலய பிரவேசம் என்பர்.
கிரியைகள்
கும்பாபிஷேகம் நடக்கும்போது ஒரு காலத்தில்
64 கிரியைகள் செய்யப்பட்டன.
காலப்போக்கில் 55 கிரியைகள்
செய்யப்பட்டன. ஆனால் தற்போது
எல்லா கிரியைகளும் செய்யப்படுவதில்லை.
64ல் முக்கியமான 13 கிரியைகளை மட்டும்
தேர்ந்தெடுத்து கும்பாபிஷேகத்தை
நடத்துகின்றனர்.
ஆசாரியவர்ணம்
கும்பாபிஷேகத்திற்கென கிடைக்கும்
பொருளுக்கு பூஜை செய்ய
வேண்டும். இதை தன பூஜை என்பர். பூஜை
செய்த பணம் அல்லது
பொருளில் ஒரு பகுதியை கட்டட
வேலைக்கும், ஒரு பகுதியை நித்திய, மாதாந்திர,
விசேஷ நட்சத்திர பூஜை உற்சவத்திற்கும்,
மூன்றாவது பாகத்தை ஆபரணங்கள்
வாங்கவும் ஒதுக்குவார்கள். இப்படியே கோயில்
காரியங்கள் சம்பந்தப்பட்ட 11 பாகமாக
இந்த செல்வத்தை பிரிப்பார்கள்.
கும்பாபிஷேகத்தை நடத்தும் பிரதான
ஆசாரியரை வணங்கி, இந்த செல்வத்தைக்
கொண்டு குடமுழுக்கு நடத்தி
தாருங்கள் என கேட்டுக்கொள்ள
வேண்டும். இதையே ஆசாரியவர்ணம் என்பர்.
அனுக்ஞை
கோயில் பழுது பார்க்கப்பட்டு திருப்பணிகள்
நிறைவு பெற்ற பிறகு, ஒரு நல்ல நாளில்
கும்பாபிஷேக நிகழ்ச்சியை முன்னின்று நடத்தி
வைப்பதற்கு தகுதியான ஒருவரை
தேர்ந்தெடுப்பதையே அனுக்ஞை
என்கிறார்கள். விநாயகர் சன்னதி முன்பு
இந்த நிகழ்ச்சி நடக்கும். சம்பந்தப்பட்டவரே
கும்பாபிஷேகத்தை நடத்தித் தர அனுமதி
தரவேண்டும் என விநாயகரிடம் வேண்டி
கேட்டுக்கொள்வதே அனுக்ஞை ஆகும்.
பிரவேசபலி
கும்பாபிஷேகம் செய்யும் இடத்திலிருந்து
எட்டு திசைகளிலும் வசிக்கின்ற ராட்சதர்
முதலான தேவதைகளுக்கு உணவு
கொடுத்து எழுப்பி, அவர்களை கடல்,
மலை, காடு, ஆறு, மயானம் ஆகிய
இடங்களில் சென்று இருங்கள் என
திருப்திப்படுத்தி வழி அனுப்புவதே பிரவேச பலி
ஆகும். கும்பாபிஷேகங்களில் மட்டுமின்றி,
கோயில்களில் திருவிழா நடக்கும்போதுகூட இதை
செய்ய வேண்டுமென்று ஆகமங்கள்
கூறுகின்றன.
வாஸ்துசாந்தி
ஆகமங்களிலும், சிவமகா புராணத்திலும்
வாஸ்து பற்றி கூறப்பட்டுள்ளது.
அந்தகாசுரன் என்பவனை
கொல்வதற்காக தேவர்கள்
சிவபெருமானிடம் கோரிக்கை வைத்தனர்.
சிவபெருமான் தனது வியர்வைத்
துளியிலிருந்து ஒரு பூதத்தை உருவாக்கி
அந்தகாசுரனை வதைத்தார். அந்த பூதம்
சிவனிடம் பல வரங்கள் பெற்று உலகத்தை
வருத்தியது. சிவபெருமான் பூதத்தை அடக்க
அதிபவன் என்பவரை சிருஷ்டித்து அனுப்பினார்.
அதிபவன் அந்த பூதத்தின் உடலின்மீது 53
தேவதைகளை வசிக்க செய்து,
மாயக்கயிறுகளால் கட்டினார்.
இதனால் இவர் வாஸ்துபுருஷன் என
பெயர் பெற்றார். வாஸ்து
புருஷனால் குடமுழுக்கு கிரியைக்கு இடையூறு
நேராதபடி 53 தேவதைகளுக்கும் பூஜை, பலி, ஹோமம்
ஆகியவற்றால் சாந்தி செய்ய
வேண்டும். இதுவே வாஸ்துசாந்தி ஆகும்.
ரக்ஷா பந்தன்
காப்பு கட்டுதல் என இதற்கு
பொருள். சிவாச்சாரியார்கள்
நாகராஜனுக்கு பூஜை செய்து, மந்திரித்த
மஞ்சள்கயிறை வலது மணிக்கட்டில்
கட்டிக்கொள்வார்கள்.
கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ளும்
சிவாச்சாரியார்களின் குடும்பத்தில்
எதிர்பாராதவகையில் ஏதாவது தீட்டு
ஏற்பட்டால் காப்பு அவிழ்க்கப்படும்வரை
அந்த தீட்டு அவர்களை பாதிக்காது.
கடஸ்தாபனம்
கும்பாபிஷேகத்தில் மிக முக்கியமானது
கடஸ்தாபனம். கலசம் நிறுவுதல் என்பது
இதன் பொருள். தங்கம்,
வெள்ளி, தாமிரம், மண் ஆகிய
ஏதாவது ஒன்றில் கும்பங்கள்
செய்யப்படும். கும்பங்களை இப்படித்தான்
அமைக்க வேண்டும் என்ற வரையறைகள் உள்ளன.
இவ்வாறு அமைக்கப்பட்ட கும்பங்களை குறைகள்
இல்லாமல் மந்திரித்து, அக்னியில்
காட்டுவார்கள். சிவப்பு மண்ணை கும்பத்தின்
மீது பூசி, நூல் சுற்றி ஆற்றுநீர் அல்லது ஊற்று
நீரால் நிரப்புவார்கள். கும்பத்தின் மேல்
வாய் பகுதியில் மாவிலைகளை செருகி,
தேங்காய் வைப்பார்கள். கும்பத்திற்குள்
நவரத்தினம், தங்கம், வெள்ளி,
நவதானியம் ஆகியவற்றை பரப்புவார்கள்.
எந்த மூர்த்திக்கு குடமுழுக்கு நடக்கிறதோ அந்த
மூர்த்தியின் உடலாக அந்த கும்பம்
கருதப்படும்.
அஷ்டபந்தனம்
கும்பாபிஷேகத்தை அஷ்டபந்தன மகா
கும்பாபிஷேகம் என சொல்வதுண்டு.
பீடத்தின்மீது வைக்கப்படும் தெய்வ
திருவுருவங்கள் அசையாமல் உறுதியுடன்
நிலைத்து நிற்க, கொம்பரக்கு,
சுக்கான்தான், குங்குலியம், கற்காவி,
செம்பஞ்சு, ஜாதிலிங்கம்,
தேன்மெழுகு, எருமையின்
வெண்ணெய் ஆகிய எட்டுவகை
மருந்துகளை கலந்து சார்த்துவார்கள்.
அஷ்டம் என்றால் எட்டு என
பொருள். இந்த எட்டுவகை மருந்துகளை
சார்த்துவதற்கே அஷ்ட பந்தனம் என
பெயர்.
மிகுத்சம்கிரஹணம்
இதற்கு மண் எடுத்தல் என பொருள்.
கும்பாபிஷேகத்தின்போது அங்குரார்ப்பணம்
எனப்படும் முளையிடுதல் நிகழ்ச்சி நடக்கும்.
மண்ணைத்தோண்டி பாலிகைகளில் இட்டு,
நவதானியங்களை தெளித்து,
முளைப்பாலிகை அமைப்பார்கள். இதுவே மிகுத்சம்
கிரகஹணம் எனப்படும்.

1 கருத்து: