வெள்ளி, 7 டிசம்பர், 2018

விடுகதை கேள்விகள் விடைகள்


விடுகதை கேள்விகள் பகுதி ( 01 )
1. அடிமேல் அடி வாங்கி அனைவரையும் சொக்க வைக்கும். அது என்ன?
மிருதங்கம்
02. அடித்து நொறுக்கி அணலில் போட்டால் ஆவியாகத் தோன்றி அழகாய் மணக்கும். அது என்ன?
சாம்பிராணி
03. அச்சு இல்லாத சக்கரம், அழகு காட்டும் சக்கரம். அது என்ன?
வளையல்
04. அறிவின் மறுபெயர், இரவில் வருவது. அது என்ன?
மதி
05. பிறந்தது முதல் வயிற்றாலே போகிறது. அது என்ன?
பாம்பு
06. ஆயிரம் தச்சர் கூடி கட்டிய அந்த அழகான மண்டபம் , ஒருவர் கண்பட்டு உடைந்ததாம் அந்த மண்டபம். அது என்ன?
தேன் கூடு
07. எட்டாத ராணியாம் இரவில் வருவாள், பகலில் மறைவாள். அது யார்?
நிலா
08. ஒளி கொடுக்கும், விளக்கு அல்ல; சூடு கொடுக்கும், தீ அல்ல; பளபளக்கும், தங்கம் அல்ல. அது என்ன?
சூரியன்
09. அள்ளவும் முடியாது, கிள்ளவும் முடியாது. அது என்ன?
காற்று
10. ஒற்றைக்கால் மனிதனுக்கு ஒன்பது கை. அது என்ன?
மரம்
11. ஒற்றைக்கால் குள்ளனுக்கு எட்டுக் கை. அது என்ன?
குடை
12. ஊருக்கெல்லாம் ஓய்வு, உழைப்பவர்க்கும் ஓய்வு; இவனுக்கு மட்டும் ஓய்வில்லை; இரவும் பகலும் ஓட்டந்தான். அது என்ன?
மூச்சு
13. ஒற்றைக் காலில் ஆடுவான், ஓய்ந்து போனால் படுப்பான். அவன் யார்?
பம்பரம்
14. பகலிலே வெறுங்காடு, இரவெல்லாம் பூக்காடு. அது என்ன?
வானம்
15. அடித்தால் விலகாது, அணைத்தால் நிற்காது. அது என்ன?
தண்ணீர்
16. அனைவரையும் நடுங்க வைப்பான், ஆதவனுக்கே அடங்குவான். அது என்ன?
குளிர்
17. உணவு கொடுத்தால் வளரும்; நீர் கொடுத்தால் அழியும். அது என்ன?
நெருப்பு
18. ஊசி போல் இருப்பான், ஊரையே எரிப்பான். அது என்ன?
தீக்குச்சி
19. தண்ணீர் இல்லாமல் வளரும்; தரை இல்லாமல் படரும். அது என்ன?
உரோமம்
20. இதயம் போல் துடிப்பிருக்கும், இரவு பகல் விழித்திருக்கும். அது என்ன?
கடிகாரம்
பகுதி ( 02 )
01. நன்றிக்கு வால் கோபத்துக்கு வாய் அது என்ன?
நாய்
02. உயரத்தில் இருப்பிடம்.தாகம் தீர்ப்பதில் தனியிடம் அது என்ன?
இளநீர்
03. தலையில் கீரீடம் வைத்த தங்கப்பழம் அது என்ன?
அன்னாசிப்பழம்
04. எட்டுக்கால் ஊன்றி இருகால் படமெடுக்க வட்டக் குடைபிடித்து வாறாராம் வன்னியப்பு அது என்ன?
நண்டு
05. படபடக்கும்,பளபளக்கும் மனதுக்குள் இடம் பிடிக்கும் அது என்ன?
பட்டாசு
06. சங்கீதம் பாடுபவனுக்கு சாப்பாடு இரத்தம் அது என்ன?
நுளம்பு
07. கந்தல் துணிக்காறி முத்துப் பிள்ளைகள் பெற்றாள் அவள் யார்?
சோளப்பொத்தி
08. மரத்திற்கு மேலே பழம், பழத்திற்கு மேலே மரம் அது என்ன?
அன்னாசிப்பழம்
09. ஊசி நுழையாத கிணற்றிலே ஒரு படி தண்ணீர்?
தேங்காய்
10. நாளெல்லாம் நடந்தாலும் நாற்பதடி செல்லாது அந்த நாயகனுக்கோ உடல் மேல் கவசம் அது என்ன?
நத்தை
11. ஏரியில் இல்லாத நீர்,தாகத்திற்கு உதவாத நீர், தண்ணீர் அல்ல அது என்ன?
கண்ணீர்
12. கண்ணீர் விட்டு வெளிச்சம் தருவாள் அவள் யார்?
மெழுகுதிரி
13. தலைக்குள் கண் வைத்திருப்பவன் இவன் மட்டும்தான் அவன் யார்?
நுங்கு
14. உணவை எடுப்பான் ஆனால் உண்ணமாட்டான் அவன் யார்?
அகப்பை
15. ஒற்றை கிண்ணத்துக்குள் இரட்டைத் தைலங்கள் அவை எவை?
முட்டை
16. ஒட்டியவன் ஒருத்தன், பிரித்தவன் இன்னொருவன். அது என்ன?
கடிதம்
17. வெள்ளத்தில் போகாது, வெந்தணலில் வேகாது. கொள்ளையடிக்க முடியாது, கொடுத்தாலும் குறையாது. அது என்ன?
கல்வி
18. பொட்டுப்போல் இலை இருக்கும், பொரிபோல் பூப் பூக்கும், தின்னக்காய் காய்க்கும், தின்னாப் பழம் பழுக்கும் அது என்ன?
முருங்கைமரம்
19. தண்ணீரில் பிறப்பான்; தண்ணீரில் இறப்பான். அவன் யார்?
உப்பு
20. குண்டு குள்ளனுக்கு குடுமி நிமிர்ந்தே இருக்கும் அவன் யார்?
கத்தரிக்காய்
பகுதி ( 03 )
01.கண்ணில் தென்படுவான், கையில் பிடிபட மாட்டான். அவன் யார்?
புகை
02. வெயிலில் மலரும், காற்றில் உலரும். அது என்ன?
வியர்வை
03. வேகாத வெயிலில் வெள்ளையப்பன் விளைகிறான். அது என்ன?
உப்பு
04. கழுத்து உண்டு, தலையில்லை; உடல் உண்டு, உயிர் இல்லை, கையுண்டு, விரல் இல்லை. அது என்ன?
சட்டை
05. ஆயிரம் பேர் அணிவகுத்தாலும் ஒரு தூசி கிளம்பாது. அவை யாவை?
எறும்புகள்
06. ஆகாயத்தில் பறக்கும். அக்கம் பக்கம் போகாது. அது என்ன?
கொடி
07. ஆறு எழுத்துள்ள ஓர் உலோகப் பெயர். அதன் கடை மூன்று எழுத்துகள் சேர்ந்தால் ஒரு கொடிய பிராணி. அது என்ன?
துத்தநாகம்
08. அண்டமென்ற பெயரும் உண்டு, அடைகாத்தால் குஞ்சுமுண்டு. அது என்ன?
முட்டை
09. வந்தும் கெடுக்கும், வராமலும் கெடுக்கும். அது என்ன?
மழை
10. பூமியிலே பிறக்கும், புகையாய்ப் போகும். அது என்ன?
பெட்ரோல்
11. தலையை சீவினால் தாகம் தீர்ப்பான்.அவன் யார்?
இள‌நீ‌ர்
12. ஆயிரம் பேர் வந்து சென்றாலும் வந்த சுவடு தெரியாது? அது என்ன?
எறு‌ம்பு
13. வினா இல்லாத ஒரு விடை அது என்ன விடை?
ப‌ணி‌விடை
14. உரசினால் உயிரே மாய்த்துக் கொள்ளும் அது என்ன?
தீ‌க்கு‌ச்‌சி
15. கை பட்டால் சிணுங்கும் கன்னிப் பெண், கூச்சல் போட்டு கதவை திறக்க வைப்பவள் அவள் யார்?
கா‌லி‌ங்பெ‌ல்
16. தாழ்ப்பாள் இல்லாத கதவு, தானாக மூடி திறக்கும் கதவு அது என்ன?
க‌ண் இமை
17. பேசாத வரை நான் இருப்பேன். பேசினால் நான் உடைந்துவிடுவேன். நான் யார்?
அமைதி
18. நான் சூரியனைக் கடந்து சென்றால் கூட எனக்கு நிழல் ஏற்படாது. நான் யார்?
தென்றல்
19. இடி இடிக்கும், மின்னல் மின்னும், மழை பெய்யாது- அது என்ன?
பட்டாசு
20. ஆயிரம் பேர் அணி வகுத்தாலும் ஆரவாரம் இராது- அவர்கள் யார்?
எறும்புக் கூட்டம்
பகுதி ( 04 )
01. முழு உலகமும் சுற்றி வரும், ஆனால் ஒரு மூலையிலேயே இருக்கும் அது என்ன?
முத்திரை
02. ஆகாரமாக எதையும் தந்தால் சாப்பிடுவேன், ஆனால் நீரை குடிக்க தந்தால் இறந்து விடுவேன், நான் யார்?
நெருப்பு
03. கண்டு பிடித்தவனும் வைத்திருக்கவில்லை, வாங்கியவனும் உபயோகிக்கவில்லை, உபயோகிப்பவனுக்கு அதனை பற்றி எதுவும் தெரியாது அது என்ன?
சவப்பெட்டி
04. ஒரு குற்றத்தை செய்ய முயற்சித்தால் தண்டனை உண்டு, ஆனால் குற்றத்தை செய்தால் தண்டிக்க முடியாது, அக் குற்றம் என்ன?
தற்கொலை
05. 3. முட்டையிடும், குஞ்சு பொரிக்காது. கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது அது என்ன?
குயில்
06. வெளியே உள்ளதை எறிந்து உள்ளே உள்ளதை சமைத்தான். பின் வெளியே உள்ளதை சாப்பிட்டு விட்டு உள்ளே உள்ளதை எறிந்தான் அது என்ன?
சோளம்
07. மேலிலும் துவாரம், கீழிழும் துவாரம், வலதிலும் துவாரம், இடதிலும் துவாரம், உள்ளிலும் துவாரம் வெளியிலும் துவாரம் இருந்தும் நீரை என்னுள் சேமித்து வைப்பேன், நான் யார்?
பஞ்சு
08. சுற்றும்போது மட்டும் சுகம் தருவாள். அது என்ன?
மின்விசிறி
09. செய்தி வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே. அது என்ன?
தொலைபேசி
10. கல்லுக்கும் முள்ளுக்கும் அஞ்சாதவன், பள்ளநீரைக் கண்டு பதைபதைக்கிறான். அது என்ன?
நெருப்பு
11. கலர்ப்பூ கொண்டைக்காரி, காலையில் எழுப்பிவிடுவாள். அது என்ன?
சேவல்
12. கந்தல் துணி கட்டியவன், முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன?
சோளக்கதிர்
13. கடலிலே கலந்து, கரையிலே பிரிந்து, தெருவிலே திரியும் பூ எது?
உப்பு
14. கறுப்புக் காகம் ஓடிப்போச்சு, வெள்ளைக் காகம் நிற்குது. அது என்ன?
உளுந்து
15. காலாறும் கப்பற்கால் கண்ணிரண்டும் கீரை விதை. அது என்ன?

16. மழையோடு வருகின்ற மஞ்சள் புறாவை வெட்டினால் ஒரு சொட்டு இரத்தம் வராது. அது என்ன?
ஈசல்
17. . உருவத்தில் சிறியவன். உழைப்பில் பெரியவன். அவன் யார்?
எறும்பு
18. எண்ணெய் வேண்டா விளக்கு; எடுப்பான் கை விளக்கு. அது என்ன?
மெழுகுவர்த்தி
19. வித்தில்லாமல் விளையும்; வெட்டாமல் சாயும். அது என்ன?
வாழை
20. அம்மா பின்னிய நூலை அவிழ்த்தால் போச்சு. அது என்ன?
இடியாப்பம்
பகுதி ( 05 )
01. மணம் இல்லாத மல்லிகை மாலையில் மலரும் அது என்ன?
தீபம்
02. அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் அது என்ன?
நிலா
03. மண்ணுக்குள் இருக்கும், மங்கைக்கு அழகு தரும் அது என்ன?
மஞ்சள்
04. இரவும் பகலும் ஓய்வு இல்லை, படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன?
இதயம்
05. உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன?
தக்காளி
06. ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன?
கடல்
07. சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன?
கண்
08. மழை காலத்தில் பிடிப்பான் அவன் யார்?
காளான்
09. காய்க்கும் பூக்கும் கலகலக்கும் காகம் இருக்கக் கொப்பில்லை அது என்ன?
நெல்லு
10. கத்தி போல் இலை இருக்கும் கவரிமான் பூ பூக்கும் தின்ன பழம் கொடுக்கும் தின்னாத காய் கொடுக்கும் அது என்ன?
வேம்பு
11. ராஜா, ராணி உண்டு நாடு அல்ல. இலைகள் பல உண்டு, தாவரம் இல்லை! அது என்ன?
காட்ஸ்
12. கடலில் கலக்காத நீர், யாரும் குடிக்காத நீர் – அது என்ன?
கண்ணீர்
13. ஓர் அரண்மனையில் முப்பத்திரெண்டு காவலர்கள் – அது என்ன?
வாய்
14. விடுமுறை இல்லாத கடை எது?
சாக்கடை
15. சின்னப்பயல் உரசினால் சீறிப் பாய்வான் – அது என்ன?
தீக்குச்சி
16. வடிவழகு மாப்பிள்ளை வயிற்றால் நடக்கிறார் அவர் யார்?
பாம்பு
17. யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும் அது என்ன?
கண் இமை
18. வளைந்து நெளிந்து செல்பவள் வழியெங்கும் தாகம் தீர்ப்பாள் அவள் யார்?
ஆறு அல்லது அருவி
19. அடிக்காமல், திட்டாமல் கண்ணீரை வரவழைப்பாள் அவள் யார்?
வெங்காயம்
20. வளைஞ்சு நெளிஞ்சு ஆடும் தண்ணீர் குடித்தால் சாகும் அது என்ன?
நெருப்பு
பகுதி ( 06 )
01. தொட்டுப் பார்க்கலாம் எட்டிப் பார்க்கமுடியாது அது என்ன ?
முதுகு
02. மாமா போட்ட பந்தல் மறுபடி பிரிச்சா கந்தல் அது என்ன ?
சிலந்தி வலை
03. முறையின்றித் தொட்டால்,ஒட்டிக் கொண்டு உயிரை எடுப்பான் அவன் யார் ?
மின்சாரம்
04. நூல் நூற்கும் நெசவாளிக்கு கட்டிக்கொள்ள துணியில்லை அது என்ன ?
சிலந்தி வலை
05. நடக்கவும் மாட்டேன், நகராமல் இருக்கவும் மாட்டேன் நான் யார் ?
மணிக்கூடு
06. பல அடுக்கு மாளிகையில் இனிப்பு விருந்து. அது என்ன ?
தேன்
07. உடல் கொண்டு குத்திடுவான்; உதிரிகளை ஒன்றிணைப்பான். அது என்ன ?
ஊசி
08. ஆள் இறங்காத குளத்தில் ஆடி இறங்கி கூத்தாடுது. அது என்ன ?
மத்து
09. என்னைப் பார்க்க முடியும், ஆனால் எனக்கு எடை கிடையாது. என்னை ஒரு பாத்திரத்தில் போட்டால் அதன் அளவை குறைத்திடுவேன். நான் யார் ?
துவாரம்
10. நான்தான் சகலமும். என்னைப் பார்க்க முடியாது, பிடிக்கவும் முடியாது. எனக்கு வாயில்லை, ஆனால் நான் ஓசை எழுப்புவேன். நான் யார் ?
காற்று
11. பேசுவான் நடக்கமாட்டான்; பாடுவான் ஆடமாட்டான். அவன் யார் ?
வானொலிப் பெட்டி
12. தலை இல்லாதவன் தலையை சுமப்பவன். அவன் யார் ?
தலையணை
13. காலடியில் சுருண்டிருப்பாள்; கணீர் என்று குரலிசைப்பாள். அவள் யார் ?
மெட்டி
14. கூட்டுச் சேர்ந்து கோட்டைக் கட்டும்; மாட்டுவோரை மடக்கித் தாக்கும். அது என்ன ?
தேனீ
15. அடி மலர்ந்து நுனி மலராத பூ – அது என்ன ?
வாழைப்பூ
16. அடர்ந்த காட்டின் நடுவே ஒரு பாதை – அது என்ன ?
தலை வகிடு
17. அத்தையில்லா அத்தை என்ன அத்தை ?
சித்தரத்தை
18. அத்தானில்லா அத்தான் என்ன அத்தான் ?
மொடக்கத்தான்
19. அந்தரத்தில் தொங்குவது சொம்பும் தண்ணீரும் – அது என்ன?
இளநீர்
20. அத்துவான காட்டிலே பச்சைப்பாம்பு தொங்குது – அது என்ன?
புடலங்காய்
பகுதி ( 07 )
01. காலையிலும் மாலையிலும் நெட்டை மதியம் குட்டை நான் யார்?
நிழல் அல்லது விம்பம்
02. பற்கள் இருக்கும் கடிக்கமாட்டான் அவன் யார்?
சீப்பு
03. வெள்ளை மாளிகை உள்ளே செல்ல வாசல் இல்லை அது என்ன?
முட்டை
04. ஐந்து வீட்டிற்க்கு ஒரு முற்றம் அது என்ன?
உள்ளங்கையும் விரல்களும்
05. சட்டையைக் கழற்றினால் சத்துணவு அது என்ன?
வாழைப்பழம்
06. பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன?
செத்தல் மிளகாய்
07. அடிக்காத பிள்ளை அலறித் துடிக்குது. அது என்ன?
சங்கு
08. தட்டச் சீறும் அது என்ன?
தீக்குச்சி
09. நீளவால் குதிரையின் வால் ஓடஓடக் குறையும் அது என்ன?
தையல் ஊசியும் நூலும்
10. கண்ணால் பார்க்கலாம் கையால் பிடிக்கமுடியாது அது என்ன?
நிழல்
11. முதுகிலே சுமை தூக்கி முனகாமல் அசைந்து வரும் அது என்ன?
நத்தை
12. வயதான பலருக்கு புதிதாக ஒரு கை அது என்ன?
வழுக்கை
13. தலையைச் சீவினால் தாளில் நடப்பான் அவன் யார்?
பென்சில்
14. காற்றைக் குடித்து காற்றில் பறப்பான், அவன் யார்?
பலூன்
15. பச்சை நிற அழகிக்கு உதட்டுச் சாயம் பூசாமலே சிவந்தவாய் அவள் யார்?
கிளி
16. அம்மா படுத்திருக்க மகள் ஓடித்திரிவாள் அது என்ன?
அம்மி குளவி
17. கன்று நிற்க கயிறு மேயுது அது என்ன?
பூசனிக்கொடி
18. கசக்கிப் பிழிந்தாலும் கடைசிவரை இனிப்பான். அவன் யார்?
கரும்பு
19. பிடுங்கலாம் நடமுடியாது அது என்ன?
தலைமுடி
20. வாலால் நீர் குடிக்கும்,வயால் பூச்சொரியும் அது என்ன?
விளக்கு
பகுதி ( 08 )
01. காற்று நுழைந்ததும் கானம் பாடுகிறான். அவன் யார்?
புல்லாங்குழல்
02. ஓட்டம் நின்றால் போதும் ஆட்டம் நின்று போகும். அது என்ன?
ரத்தம்
03. தணித்து உண்ணமுடியாது என்றாலும் இது சேர்த்தால்தான் உணவுக்கு சுவை அது என்ன?
உப்பு
04. வெட்டிக்கொள்வான் ஆனாலும் ஒட்டிக்கொள்வான் அவன் யார்?
கத்தரிக்கோல்
05. ஓடியாடி வேலை செய்தபின் மூலையில் ஒதுங்கிக்கிடப்பாள் அவள் யார்?
துடைப்பம் (தும்புத்தடி)
06. ஏற்றி வைத்து அணைத்தால் எரியும் வரை மணக்கும் அது என்ன?
ஊதுபத்தி
07. மூன்றெழுத்துப் பெயராகும். முற்றும் வெள்ளை நிறமாகும் அது என்ன?
பஞ்சு
08. தொட்டால் மணக்கும், சுவைத்தால் புளிக்கும். அது என்ன?
எழுமிச்சம்பழம் (தேசிக்காய்)
09. எவர் கையிலும் சிக்காத கல் எங்கும் விற்காத கல், அது என்ன?
விக்கல்
10. காலையிலே கூவும் பட்சி, கந்தன் கொடியில் காணும் பட்சி, குப்பையைக் கிளறும் பட்சி, கொண்டையுடைய பட்சி – அது என்ன?
சேவல்
11. சங்கீதம் பாடும் சல்லாபம் செய்யும் சமயத்தில் ரத்தம் குடிக்கும் – அது என்ன?
கொசு
12. சட்டையைக் கழற்றியதும் சடக்கென்று உள்ளே விழும் – அது என்ன?
வாழைப்பழம்
13. சங்கரன் கோவில் டப்பா தாயும் மகளும் தேய்ப்பா – அவை என்ன?
அம்மி குழவி
14. கோட்டையயைச் சுற்றி மதில் சுவர் உள்ளே மறைந்திருக்கிறான் வேட்டைக்காரன் – அது என்ன?
நாக்கு
15. கோடையிலே ஆடி வரும் வாடையில முடங்கி விடும் – அது என்ன?
மின்விசிறி
16. கோணல் எத்தனை இருந்தாலும் குணமும் குறியும் மாறாது – அது என்ன?
கரும்பு
17. கோவில் குளம் இல்லாமல் கொட்டி திரிகிறான் ஒருவன் – அவன் யார்?
குயவர்
18. கோவிலைச் சுற்றி கறுப்பு கோவிலுக்குள்ளே வெளுப்பு – அது என்ன?
சோற்றுப்பானை
19. கோயிலுக்குப் போனானாம் எங்க தம்பி தீர்த்தம் விட்டானாம் தங்கத் தம்பி – அது என்ன?
தேங்காய்
20. கோழிக் குஞ்சு பொரிப்பது எப்படி? தாழி நெய்யை எடுப்பது எப்படி?
முட்டையிட்டு
பகுதி ( 09 )
01. காவி உடையணியாத கள்ளத்தவசி கரையோரம் கடுந்தவம் செய்கிறான் அவன் யார்?
கொக்கு
02. காளைக்குக் கழுத்து மட்டும் தண்ணீர் அது என்ன?
தவளை
03. காற்று இல்லாத கண்ணாடிக் கூண்டில் மஞ்சக் கோழி மயங்கி கிடக்குது அது என்ன?
முட்டை
04. காலில்லாதவன் வளைவான், நெளிவான் காடு மேடெல்லாம் அலைவான் அவன் யார்?
பாம்பு
05. காலைக்கடிக்கும் செருப்பல்ல, காவல் காக்கும் நாயல்ல அது என்ன?
முள்
06. காலையில் ஊதும் சங்கு, கறி சமைக்க உதவும் சங்கு அது என்ன?
சேவல்
07. காலில்லா பந்தலைக் காணக் காண சந்தோஷம் அது என்ன?
வானம்
08. கையுண்டு, கழுத்துண்டு, தலையுண்டு உயிரில்லை அது என்ன?
சட்டை
09. வண்ணப் பட்டுச் சேலைக்காரி, நீல வண்ண ரவிக்கைக் காரி அது என்ன?
மயில்
10. சொன்னதைச் சொல்லும் பொண்ணுக்கு, பச்சைப் பாவாடை கேட்குதாம் அது என்ன?
கிளி
11. தண்ணீரில் மிதக்குது கட்டழகிய வீடுகள் -அது என்ன?
கப்பல்கள்
12. மணல் வெளியில் ஓடுது தண்ணீர் கேட்காத கப்பல் அது என்ன?
ஒட்டகம்
13. தொட்டு விட்டால் மூடிக் கொள்ளும் பச்சை மாளிகை ஜன்னல்கள் அது என்ன?
தொட்டா சுருங்கிச் செடி
14. வானத்தில் பறக்கும் பறவை இது, ஊரையே சுமக்கும் பறவை இது அது என்ன?
விமானம்
15. சிவப்பான பெட்டிக்குள் கருகு மணி முத்துக்கள் அது என்ன?
பப்பாளி விதைகள்
16. நடக்கத் தெரியாதவன், நட்டுவனுக்கு வழி காட்டுகிறான் அவன் யார்?
கைகாட்டி
17. நடலாம், பிடுங்க முடியாது அது என்ன?
பச்சை குத்துதல்
18. நான் வெட்டுப்பட்டால், வெட்டியவனை அழ வைப்பேன் நான் யார்?
வெங்காயம்
19. நடைக்கு உவமை, நளனக்கு தூதுவன் அவன் யார்?
அன்னம்
20. நாலு மூளைக்கிணறு, நாகரத்தினக்கிணறு, எட்டிப் பார்த்தால் சொட்டுத தண்ணீர் இல்லை அது என்ன?
அச்சு வெல்லம்

2 கருத்துகள்: