வெள்ளி, 5 அக்டோபர், 2018

அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு என்ன வேண்டும்


அமைதியான குடும்ப வாழ்க்கைக்கு
என்ன வேண்டும்?

அமைதியான குடும்ப வாழ்விற்கு மனைவி பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டிய சில பழக்க வழக்கங்கள்

1.அதிகாலை 5 மணிக்கு படுக்கையில் இருந்து எழுவதை வழக்கமாக கொள்ளல் வேண்டும்

2.தான் மட்டும் எழுந்தால் போதாது தனது கணவரையும் எழுப்பி விடும் பழக்கத்தை கொண்டிடல் வேண்டும்

3.முதல் நாள் இரவே மறுநாள் செய்திட வேண்டிய வேலைகளை  திட்டமிடல் வேண்டும்.

4. கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் நல்ல தாயாக மனைவியாக இருப்பது முக்கியமல்ல முதலில் நல்ல தோழியாக இருக்க வேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள்

5.பிள்ளைகளுக்கு முன்னால் கணவரை திட்டுவதை விட்டு விடுங்கள். இல்லையெனில் நாளை உங்கள் பிள்ளைகளும்  உங்களைப் போலவே வருவார்கள்.

6 .பிள்ளைகளுக்கு முன்னாள் மாமனார் மாமியர் மற்றும் நாத்தனார் மைத்துனரை வசை பாடுவதைத் தவிருங்கள்

7.கணவரை அடிப்படையாகக் கொண்டு பிள்ளைகளைத் திட்டாதீர்கள் "அப்பன மாதிரியே வந்திருக்கு "

8.எப்படி நீங்கள் சதா வீட்டு வேலைகளைப் பார்த்து குடும்பத்தை ஆரோக்கியமாகவும் செல்வச் செழிப்பாகவும் வைத்துக் கொள்ள மெனப்படுகிண்டீர்களோ உங்கள் கணவரும் அப்படித் தானே என்பதை ஒரு போதும் மறவாதீர்

9.மாமனார் மாமியாரை அம்மா அப்பா என்று அழைக்காவிட்டாலும் அத்தை மாமா என்று அடிக்கடி அழைத்து அவர்களை உங்கள் வசப்படுத்திக் கொள்ளுங்கள்

10.வீட்டிற்கு வந்த நாத்தனாரை யாரோ என்று எண்ணாமல் சமையல் கட்டிற்கு அழைத்து அவருக்கும் ஒரு வேலை கொடுத்து மனமார பேசிக் கொண்டு ஒரு தோழியைப் போல நடந்து கொள்ளுங்கள்

11.வீட்டில் பாத்திரங்களை கழுவும் போது சத்தம் வரமால் பார்த்துக் கொள்ளுங்கள்

12.குறிப்பாக உங்கள் கணவரின் உறவினர் வருகையின் போது மிக மிக கவனமாக செயல்படுங்கள்

13.வீட்டை அழகாக வைப்பது வீட்டில் உள்ள அனைவரின் கடமை என்பதை உணர்த்தி அவர்களை அதற்கேற்றபடி அனைவருக்கும் பயிற்சி கொடுத்திடுங்கள்!

14.வீட்டில் சத்தம் போட்டு பேசாதீர். அமைதியாக பொறுமையாக பேசிடுங்கள் .
காட்டுத்தனமாக கத்துவதால் எதும் சீராகப் போவதில்லை

15. எந்த ஒரு சூழ்நிநிலையிலும் ஏன்டா பெண்ணாகப் பிறந்தோம் என்று மட்டும் எண்ணி விடாதீர். எண்ணவும் கூடாது

16. என்ன பிழைப்பு இது? நாலு சுவற்றிற்குள் எல்லோருக்கும் வடித்துக் கொட்டி.இதுக்குப் பதில் ஆம்பளையா பொறந்திருக்கலாமேன்னு .இப்படிப்பட்ட எண்ணங்கள் உங்களின் கனவில் கூட வரக் கூடாது

17.தேவையில்லாமல் பீரோக்களில் புடவைகளை வாங்கி சேகரிக்காதீர்கள்

18.
நறுக்கென்றிந்தாலும் 4 புடவைகள் நச்சுனு வைத்திருங்கள்

19.அநேகமான நேரங்களில் நைட்டி அணிவதால் கூடுதலான நைட்டிகளை வைத்துக் கொள்ளுங்கள்

19.வேலைக்காரியின் கஷ்டங்களை தயவு செய்து கணவரிடம் உருக்கமாக பகிர்ந்து கொள்ள வேண்டாம்

20.நைட்டி இதனை வேலை செய்திடும் போது மட்டுமே அணியுங்கள். மாலை வேளைகளில் நமது பாரம்பரிய உடையான சேலைக்கு மாறி பூ முடித்து கணவனை பளிச்சென வரவேறுங்கள்

21.உடை விஷயத்திலும் உங்களை அழகாக காட்டிக் கொள்வதிலும் எப்பொதும் உங்களை நீங்கள் விட்டுக் கொடுக்காதீர்கள்

22.வயதுக்கு வந்த பெண் குழந்தைகள் இருந்தாலும் உங்களின் கணவருக்கு நீங்கள் தான் காதல் தேவதை என்பதை மறக்க வேண்டாம்

23.கணவருக்கு பிடித்த மாதிரியும் தங்களின் தன்னம்பிக்கைக்கு பாதகம் இல்லாத வகையிலும்  உங்களுக்கு பிடித்த வகையிலும் ஆடைகளை அணிந்திடுங்கள்

24.குறிப்பாக உள்ளாடைகள் மீது அதிக கவனத்துடனும்  சுத்தத்திலும் முக்கிய கவனத்துடன் செயல் பட்டிடுங்கள்

25.கொடுமையான டிசைன் கடுமையான கலர் என உடைகளை அணிவதைத் தவிருங்கள்

26.கணவருடன் தினம் தினம் குறைந்தது 30 நிமிடமாவது அருகில் அமர்ந்து மனம் விட்டு பேசுங்கள் அதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்

27.உங்களுக்கு பிடித்த மாதிரி ஆடை அணிகலன்களை உங்கள் கணவருக்கு நீங்களே தேர்வு செய்த்திடுங்கள். உங்கள் கணவரின் அழகைப் பிரதிபலிக்கும் கண்ணாடி நீங்களே அதை எப்போதும் மறக்க வேண்டாம்

28.கணவரின் தொழிலைப் பற்றி முழுமையாக ஆக்கபூர்வமான தகவல்களைத் தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்

29.கணவரின் தொழில் அல்லது வேலை செய்திடும் சூழல் மற்றும் அவரின் செயல்பாடுகள் குறித்து தெரிந்து வைத்து கொள்ளுங்கள் .
30.கணவரின் வேலை மற்றும் வியாபார விஷயங்களில் அடிக்கடி மூக்கை நுழைக்காமல் அவர் மற்றவர்களோடு பழகும் விதத்தை சந்தேகக் கண் கொண்டு பார்க்காதீர்கள்

31.எல்லா கணவர்களுக்கும் தங்களின் மனைவி நல்ல தோழியாக இருக்க வேண்டும் என்பதும் அதே நேரம் கட்டுக்குள் அடங்கியவளாக இருக்க வேண்டும் என்பதே விருப்பம்

32.உங்கள் கணவரை ஜெயிக்க வேண்டும் என்றால் கொஞ்சம் பயப்படுவதாக காட்டிக் கொள்ளுங்கள்

33.பணிபுரியும் இடத்தில் உள்ள ஆண்கள்  பற்றி அதிகம் பேச வேண்டாம்.

34.எவ்வளவு உயிர்த்தோழியாக இருந்தாலும் அவர்களை ஒரு எல்லைக்குள் வைதிருங்கள் .வீட்டில் அனுமதிப்பதும் அளவோடு இருக்கட்டும்

35.வாரம் ஒருமுறை ஷாப்பிங் செல்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்

36.ஷாப்பிங் என்றவுடன் நகைக்கடை துணிக்கடை என்று மட்டும் எண்ண வேண்டாம் உழவர்சந்தை செல்வது கூட ஷாப்பிங் தானே .
37.வீடுகளில் அதிக குப்பைகள் சேராமல் பார்த்துக் கொள்ளுங்கள். வாடகை வீடு எனில் தேவையான பொருட்களை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்

38.உங்கள் குடும்ப விஷயங்களை குறிப்பாக உங்கள் அம்மாவிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்

39.உங்களின் வளர்ச்சிகளை முடிந்த மட்டும் உங்களின் அக்கா தங்கைகள் அண்ணன்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்

40.அம்மாவின் ஆலோசனைகளை கேட்பது நல்லது தான் ஆனால் அதை அளவோடு நிறுத்திக் கொள்வது நல்லது ..

41.தேவைஇல்லாமல் மகளுக்கு ஆலோசனை சொல்வது .மருமகளை சரி செய்வது போன்ற செயல்களைத் தவிர்த்திடுங்கள்.

42.அநேக பெண்களின் வாழ்க்கை கெட்டுப் போவது அம்மாக்களால் தான் என்பது ஆண்கள் சமூகத்தில் அசைக்க முடியாத நம்பிகை மறக்க வேண்டாம்

43..கணவரின் வெளிநாடு பயணங்கள் .கிளப் ஆக்டிவிடிகளில் பெரும்பாலும் கலந்து கொள்ளுங்கள்

44.புகைபிடிக்கும் கணவன்மார்களை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுக்குள் கொண்டு வாருங்கள் அதுவே நல்லது

45.கணவன்கள் நண்பர்களுடன் அடிக்கும் லூட்டிகளை ரசியுங்கள் ஆனால் அதில் உள்ள குற்றங்களை கண்டு பிடித்து ஆயுதமாக பயன்படுத்தாதீர்

46.உங்களின் கணவர் உங்களுக்கு ஒரு ஆண் .ஆனால் வெளியுலகில் அவர் ஒரு ஹீரோ என்பதை மறக்க வேண்டாம்

47.பெண்களுக்கு வாய் நீளுமானால் ஆண்களுக்கு கை நீளம் என்பதை மறக்க வேண்டாம்

48.ஒரு நல்ல பெண் தன் வீட்டைக் கோயிலாக மாற்றுகிறாள் என்பது வேத வாக்கியங்கள்..

49.உங்களை வைத்துத் தான் உங்கள் கணவரின் சமுதாய மதிப்பு உள்ளது என்பதை அவருக்கு உணர்த்துங்கள்

50.உங்களின் செயல்பாடுகள் உங்கள் பெண்பிள்ளைகளின் எதிர்காலத்தில் பங்கு கொள்கிறது என்பதை ஒரு போதுமே மறக்க வேண்டாம்

51.உங்களின் சந்தோஷமான வாழ்க்கை உங்களின் எதிர்கால மருமகளின் சந்தோஷமான வாழ்க்கைக்கு வழி வகுக்கும். அநேக ஆண்கள் தங்களின் மனைவியை தங்களின் தாய் பட்ட கஷ்டங்களை தனது மனைவிக்குத் தரக் கூடாது என்பதில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர்.

52.சாமிகளை அளவோடு கும்பிடுங்கள் .சாமி கும்பிட்டு உங்களின் ஆசாமிகளை கோட்டை விட்டு விடாதீர்கள்

53.சுவையாக சமைக்கும் பெண்களை விட அழகாகவும் இனிமையாகவும் பரிமாறும் பெண்களைத் தான் ஆண்களுக்குப் பிடிக்கிறதாம்

54.மொத்தத்தில் நீங்கள் தாயாகத் தோழியாக மனைவியாக இருந்தால் வாழ்க்கை சிறக்கும்

 சமுதாயம் மதிக்கும் ... வாழ்க்கை  எளிமையாகும். இனிமையாகும். அன்பு நிலை பெற
ஆருயிர் மனைவியை இல்வாழ்வில் சக மனித உயிராக மதித்து நடந்தாலே போதும் அகமகிழ்ச்சி பெருகும், இல்லத்தில் நிம்மதி நிலைத்திடும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக