வியாழன், 1 பிப்ரவரி, 2018

வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை


வள்ளலார் கூறிய அற்புதமான வாழ்க்கை போதனை

இதற்கு மேல் எவரும் அறிவுரை கூற இயலாது.

* வாழ்வென்பது உயிர் உள்ளவரை.
* தேவைக்கு செலவிடு.

* அனுபவிக்க தகுந்தன அனுபவி.

* இயன்ற வரை பிறருக்கு பொருளுதவி செய் மற்றும் ஜீவகாருண்யத்தை கடைபிடி.

* இனி அநேக ஆண்டுகள் வாழப்போவதில்லை.

* போகும்போது எதுவும் கொண்டு செல்லப்போவதுமில்லை.

* ஆகவே, அதிகமான சிக்கனம் அவசியமில்லை.

* மடிந்த பின் என்ன நடக்கும் என்று குழம்பாதே.

* உயிர் பிரிய தான் வாழ்வு; ஒரு நாள் பிரியும்.

* சுற்றம், நட்பு, செல்வம் எல்லாமே பிரிந்து விடும்.

* உயிர் உள்ளவரை, ஆரோக்கியமாக இரு.
* உடல்நலம் இழந்து பணம் சேர்க்காதே.

* உன் குழந்தைகளை பேணு.

* அவர்களிடம் அன்பாய் இரு. அவ்வப்போது பரிசுகள் அளி.

* அவர்களிடம் அதிகம் எதிர்பாராதே. அடிமையாகவும் ஆகாதே.

* பெற்றோர்களை மதிக்கும் குழந்தைகள் கூட; பாசமாய் இருந்தாலும்,
பணி காரணமாகவோ, சூழ்நிலை கட்டாயத்தாலோ,
உன்னை கவனிக்க இயலாமல் தவிக்கலாம், புரிந்து கொள்.

* அதைப்போல பெற்றோரை மதிக்காத குழந்தைகள்;
உன் சொத்து பங்கீட்டுக்கு சண்டை போடலாம்;

* உன் சொத்தை தான் அனுபவிக்க, நீ சீக்கிரம் சாக வேண்டுமென,
வேண்டிக் கொள்ளலாம், பொறுத்து கொள்.

* அவர்கள் உரிமையை மட்டும் அறிவர்; கடமை, அன்பை அறியார்.

* அவரவர் வாழ்வு, அவரவர் விதிப்படி என அறிந்துகொள்.

* இருக்கும்போதே குழந்தைகளுக்கு கொடு;
ஆனால், நிலைமையை அறிந்து அளவோடு கொடு.
* எல்லாவற்றையும் தந்துவிட்டு, பின் கை ஏந்தாதே,
* எல்லாமே இறந்த பிறகு என, உயில் எழுதி வைத்திராதே!
* நீ, எப்போது இறப்பாய் என எதிர்பார்த்து காத்திருப்பர்.
* எனவே கொடுப்பதை கொடுத்து விடு, தரவேண்டியதை பிறகு கொடு.

* மாற்ற முடியாததை மாற்ற முனையாதே,
* மற்றவர் குடும்ப நிலை கண்டு, பொறாமையால் வதங்காதே.
* அமைதியாக மகிழ்ச்சியோடு இரு.
* பிறரிடம் உள்ள நற்குணங்களை கண்டு பாராட்டு.
* நண்பர்களிடம் அளவளாவு.
* நல்ல உணவு உண்டு, நடை பயிற்சி செய்து, உடல் நலம் பேணி;
* இறை பக்தி கொண்டு; குடும்பத்தினர், நண்பர்களோடு கலந்து உறவாடி மனநிறைவோடு வாழ்.
* இன்னும்; இருபது, முப்பது, நாற்பது ஆண்டுகள்; சுலபமாக ஓடிவிடும்.
* வாழ்வை கண்டு களி! ரசனையோடு வாழ்! வாழ்க்கை வாழ்வதற்கே!

* நான்கு நபர்களை புறக்கணி!
🤗 மடையன்
🤗 சுயநலக்காரன்
🤗 முட்டாள்
🤗 ஓய்வாக இருப்பவன்

* நான்கு நபர்களுடன் தோழமை கொள்ளாதே!
😏 பொய்யன்
😏 துரோகி
😏 பொறாமைக்கைரன்
😏 மமதை பிடித்தவன்

* நான்கு நபர்களுடன் கடினமாக நடக்காதே!
😬 அனாதை
😬 ஏழை
😬 முதியவர்
😬 நோயாளி

* நான்கு நபர்களுக்கு உனது கொடையை தடுக்காதே!
💑 மனைவி
💑 பிள்ளைகள்
💑 குடும்பம்
💑 சேவகன்

* நான்கு விசயங்களை ஆபரணமாக அணி!
🙋‍♂ பொறுமை
🙋‍♂ சாந்த குணம்
🙋‍♂ அறிவு
🙋‍♂ அன்பு

* நான்கு நபர்களை வெறுக்காதே!
💆 தாய்
👳 தந்தை
👷 சகோதரன்
🙅 சகோதரி

*நான்கு விசயங்களை குறை!
👎 உணவு
👎 தூக்கம்
👎 சோம்பல்
👎 பேச்சு

* நான்கு விசயங்களை தூக்கிப்போடு!
🏃 துக்கம்
🏃 கவலை
🏃 இயலாமை
🏃 கஞ்சத்தனம்

* நான்கு நபர்களுடன் சேர்ந்து இரு!
👬 மனத்தூய்மை உள்ளவன்
👬 வாக்கை நிறைவேற்றுபவன்
👬 கண்ணியமானவன்
👬 உண்மையாளன்

* நான்கு விசயங்கள் செய்!
🌷 தியானம் , யோகா
🌷 நூல் வாசிப்பு
🌷 உடற்பயிற்சி
🌷 சேவை செய்தல்
☘☘☘☘☘☘☘☘☘

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக