வெள்ளி, 2 நவம்பர், 2018

பன்னீரின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா

பன்னீரின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா

பன்னீர் ஒரு சிறந்த மருத்துவ குணம் நிறைந்த நீராகும். இதனை நாம் பயன்படுத்தி நமது உடலில் உள்ள நோய்களை சரி செய்து கொள்ள முடியும் பன்னீரின் பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
ஈரப்பதம் இல்லாத சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்துக் கொள்ள ரோஜா இதழின் நீர் பயன்படுகிறது.
இதில் உள்ள ஆக்சிஜனேற்ற பொருட்கள் சருமத்தை வலுப்படுத்தவும், சோர்வான தசைகளை புத்துணர்வு பெற வைக்கவும் பன்னீர் உதவுகிறது. மேலும், சருமத்தில் ஏற்படும் சுருக்கத்தை தடுக்கிறது.பன்னீர் சருமம் மட்டுமின்றி தலைமுடிக்கும் போஷாக்கு அளிக்கிறது. முடியை பட்டுப்போன்று வைக்கவும், பொடுகு தொல்லையில் இருந்து நிரந்தர தீர்வு தரும்.
தினசரி பயன்படுத்தும் கிரீம்களில் பன்னீரை கலந்து உபயோகித்தால் சருமம் மிருதுவாகும்அழுக்கு படிந்த முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புத்துணர்வு அளிக்கும்.முகப்பருக்களை போக்க பன்னீர் சிறந்த மருந்தாக திகழ்கிறது. எலுமிச்சை சாறு மற்றும் பன்னீரை சம அளவு எடுத்துக் கொண்டு முகத்தில் தேய்த்து அரை மணி நேரம் ஊறவைத்து இதமான நீரில் முகம் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் 2-3 வாரங்களில் முகப்பருக்கள், தழும்புகள் குறைந்து முகம் புதுப்பொலிவுடன் காணப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக