செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவராய் எழுதி இருக்கும் வார்த்தைகள் கல்வெட்டுகள்:


உச்சநீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவராய் எழுதி இருக்கும் வார்த்தைகள் கல்வெட்டுகள்:
1. வேதனையான மவுனம் வெகுகாலம் நீடித்ததால் கவலை தரக்கூடிய தகவல்களை மேடையேற்ற வேண்டி உள்ளது.
2. சொத்து சம்பாதிப்பதில் இவர்களுக்கு எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இல்லை.
3. இவர்களது தந்திரங்களைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது.
4. பணம் சம்பாதிப்பதை அச்சம் இல்லாமல் செய்துள்ளார்கள்.
5. இவர்களிடம் பேராசை மட்டுமே இருந்துள்ளது.
6. இவர்களை அனுமதித்தால் நாட்டில் அமைதி குலைந்துவிடும்.
7. இவர்களை அனுமதித்தால் நியாய தர்மம் பார்ப்பவர்கள் நாட்டில் சிறுபான்மை ஆகிவிடுவார்கள்.
8. இவர்கள் சமுதாயத்துக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.
9. வருமானத்துக்கு அதிகமாக 211 சதவிகிதம் சம்பாதித்துள்ளார்கள்.
10. இவர்கள் ஒரே வீட்டில் கூடி இருந்ததே வாழ்வதற்காக அல்ல. சதி செய்வதற்காகத்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக