திங்கள், 11 ஜூன், 2018

உங்கள் குழந்தைக்கு தெரிந்தே கெடுதல் செய்வீர்களா...? இத படியுங்க.

உங்கள் குழந்தைக்கு தெரிந்தே கெடுதல் செய்வீர்களா...? இத படியுங்க.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே பிடித்தது என்றால் இந்த இனிப்பு வகை தான். இதை வித்தியாசமாக சாக்கலேட் , பிஸ்கட், கேக், ஐஸ் கிரீம், இனிப்பு பிரெட்,  என பல்வேறு வகையாக தயாரித்து விற்பனை செயகின்றனர். இதை குழந்தைகள் அதிகம் உட்கொண்டால் வரும் பாதிப்புகளை பற்றி தெரியுமா? வாருங்கள் காண்போம்.
குழந்தைகள் இனிப்பு வகைகளை அதிகம் உட்கொள்ளுவதனால் அவர்கள் ஹைப்பர்ஆக்டிவாக இருப்பார்கள் என நம் முன்னோர்கள் சொல்லுவார்கள். இது உண்மைதான் குழந்தைகள் அதிகமாக இனிப்பு வகைகளை சாப்பிடுவதனால் துறுதுறவென இருப்பார்கள். ஆனால் அது சர்க்கரை மூலமாக வரும் இனிப்பு இல்லை. பண வெள்ளம், பனங்கற்கண்டு, நாட்டு வெல்லம், போன்றவைகளால் தயாரிக்க பட்ட உணவு பொருட்கள்.
 
ஆனால்  இப்போதெல்லாம் பாக்கெட் செய்யப்பட்ட இனிப்புகளை குழந்தைகள் அதிகமாக சாப்பிடுவதனால் அவர்களுக்கு சர்க்கரை வியாதிகள் வர வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். மேலும் இதைய நோய்கள் வருவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். 
குழந்தைகளை இனிப்பு வகைகளை சாப்பிடாமல் பாதுகாப்பது எப்படி? 
உணவில் சேர்க்கப்படும் சர்க்கரையின் அளவை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கவும். 
வெளியில் சென்று வீடு திரும்பும்பொழுது வாங்கி வரும் தின் பண்டங்களை தவிர்க்க வேண்டும்.
கடையில் வாங்கி தரும் பொருட்கள் நீங்கள் தயாரித்தது இல்லை என்பதை உணர வேண்டும். ஒரு சில நல்ல உண்வு படத்தை தவிர்த்து. 
குழந்தைக்கு சாப்பாடு ஊட்டும்போழுது டிவி விளம்பரங்களில் வரும் இனிப்பு பொருட்களை அவர்கள் பார்த்து அடிமையாகி விடுவார்கள் அதிலிருந்து அவர்களை பாதுகாக்க வேண்டும். எனவே சீமை சர்க்கரை மற்றும் அஸ்க்கா சர்க்கரை மூலப்பொருள் கொண்டு தயாரிக்கப்பட்ட உணவை முடிந்த அளவு தவிர்ப்போம்.



குழந்தைகள் விவரம் தெரிய ஆரம்பிக்கும போது அவர்களே புரிந்து கொள்வார்கள். வாழ்வது ஒரு முறை, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வோம். பிடித்தால் நண்பருக்கும் பகிருங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக